அரிசி கழுவும் தண்ணீரில் இவ்வளவு நன்மையா?

அரிசி கழுவு போது அந்த தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கு பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை ஒரு துணியால் வடிகட்டவேண்டும். அந்த நீரால் முகத்தையும், கூந்தலையும் அலசினால்  அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும். இதனால்.முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவுடன் காணப்படும். கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் நிறமும் பாதுகாக்கப்படும்

- Advertisement -

Comments are closed.