காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளரிடம் பேசிய பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்த நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.