காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது – பள்ளிக்கல்வித்துறை அறிக்கை

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. தேர்வு முடிந்ததும்,   வருகிற 7-ந்தேதி   பள்ளிகள் மீண்டும்   திறக்கப்பட உள்ளது.  இந்த நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களின்போது பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.   பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

- Advertisement -

Comments are closed.