புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்…

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை மும்பை புனே சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் வரையிலான சுரங்க மெட்ரோ ரெயில் பாதையை திறந்து வைக்கவும், மேலும் ரூ.22 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்கவும் திட்டமிட்டு இருந்தார். மேலும் பிரதமர் வருகைக்காக புனேயில் உள்ள எஸ்.பி. கல்லூரி மைதானத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் புனேயில் பெய்த கனமழை காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது..  இந்நிலையில் மத்திய மந்திரி முரளிதர் மொகோல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் நரேந்திர மோடி புனே மெட்ரோவின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் பாதையை வருகிற 29-ந் தேதி (நாளை) திறந்து வைக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Comments are closed.