கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ்

இந்தியாவின் வாகன சந்தையில் ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகியுடன் கியா மோட்டார்ஸ் போட்டியிட்டு வருகிறது. கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சோனெட் எஸ்யூவிகள் அதிக அளவில் இந்தியாவில் விற்பனை ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் 155 மில்லியன் டாலர் (ரூ.1,354 கோடி) அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 கியா மோட்டார்ஸ் இந்தியா சொகுசு கார்னிவல் மினிவேனின் அசெம்பிளிக்கான உதிரிப்பாகங்களின் இறக்குமதியில் தவறான தகவல்களை தெரிவித்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது .

வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அதிகமான இறக்குமதி வரி விதிப்பதாக டெஸ்லா நிறுவனம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தது.
ஹோண்டா – சோனி இணைந்து தயாரித்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொடங்கியது
ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து, ஜப்பானின் சோனி தயாரிக்கும் அஃபீலா ஏ1 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்தமுன்பதிவு கலிபோர்னியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளது. இது 2026 முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற உலகளாவிய சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.
 

- Advertisement -

Comments are closed.