திருச்சிக்கு வரும் புதிய மேம்பாலங்கள்…போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஓடத்துறை முதல் மல்லாட்சிபுரம் வரை 2.4 கி.மீ உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிலப்பரப்பு ஆய்வு மற்றும் போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் கரூர் புறவழிச்சாலை மற்றும் அரசு மருத்துவமனை, மாநகராட்சி மைய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரும் பாரதிதாசன் சாலை, ஈவேரா சாலை, புத்தூர் பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் போக்குவரத்து நெரிசலும் இருக்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன. 2 உயர் மட்ட பாலங்கள் இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏதுவாக திருச்சி மாநகரில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருந்தார். எம் ஜி ஆர் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அதன்படி அரசு மருத்துவமனை எம் ஜி ஆர் ரவுண்டானா மத்திய பேருந்து நிலையம் செல்லும் வழி வயலூர் சாலை பகுதிகள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஏற்கனவே தலைமை தபால் நிலையம் புத்தூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. காவிரி பாலம் இதற்கு அடுத்தபடியாக காவிரி பாலம் தொடங்கும் பகுதி சத்திரம் பேருந்து நிலையம் அதனை சுற்றியுள்ள அண்ணா சிலை ரவுண்டானா, கரூர் புறவழிச்சாலை கலைஞர் அறிவாலயம் சிக்னல் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஓடத்துறை மல்லாட்சிபுரம் இடையே உயர் மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கும் திட்டமானது தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பாலம் இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஓடத்துறை காவிரி பாலம் முதல் அண்ணா சிலை கலைஞர் அறிவாலயம் வழியாக அருகே வரை சுமார் 2.4 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாலத்தின் அகலம் இந்த பாலம் ஆனது முதலில் 17.2 மீட்டர் அகலத்தில் தொடங்கி சில பகுதிகளில் 13 மீட்டர் ஆகி குடமுருட்டி பாலத்துக்கு அருகே மள்ளாட்சிபுரத்தில் நிறைவடையும் பகுதியில் 10 மீட்டராக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட அமைக்கப்படும் இடையே சத்திரம் பேருந்து நிலையத்திற்கு எட்டு மீட்டர் அகலத்தில் ஒரு இனைப்பு பாதை அமைக்கப்பட இருக்கிறது. விரிவான திட்ட அறிக்கை இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு சுமார் 1.37 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிலப்பரப்பு ஆய்வு மற்றும் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணியானது தற்போது அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இது தொடர்பாக அளித்த அறிக்கையின் படி தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை உரிய வரைபடங்கள் நிலை எடுப்புக்கான கருத்துக்கள் ஆகியவை அரசு நிர்வாக ஒப்புதலுக்காக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். விரைவில் நிர்வாக ஒப்புதல் மல்லாட்சிபுரம் உயர்மட்ட பாலத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணிகளுக்காக 97.65 கோடியும் பயன்பாட்டு மாற்றத்திற்கு 31 கோடியும், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு 338.95 கோடிகளும் பணிகளை மேற்கொள்ள அரசு நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிர்வாக ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு ஒயர் மட்டும் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டால் திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilmedia360

#trichy

- Advertisement -

Comments are closed.