ரூ. 200 முதலீட்டில் ரூ. 28 லட்சம்…!எல்ஐசியின் சூப்பரான பாலிசி…!

எல்ஐசியின் ஜீவன் பிரகதி பாலிசி திட்டத்தின் வாயிலாக ரூ.28 லட்சம் நிதியை பெற முடியும். இதற்கு ஒவ்வொரு நாளும் ரூ. 200 சேமிக்க வேண்டும். குறைந்த பட்சம் 12 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் டெபாசி செய்யலாம். இத்திட்டத்தில் தினமும் டெபாசிட் செய்வதற்கு 200 ரூபாய் எடுத்து வைத்தால் போதும் இதனை மாத முதலீட்டில் 6000 ரூபாயாக டெபாசிட் செய்யலாம். இது போல் டெபாசிட் செய்யும் போது வருடத்திற்கு ரூ. 72,000 முதலீடு செய்யப்படும். அதன்படி 20 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 14,40,000 முதலீடு செய்யப்படும். இந்த முதலீடு தொகை அனைத்து பலன்களையும் சேர்த்து ரூ. 28 லட்சமாக இருக்கும். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் டெபாசிட் செய்பவர்களின் ரிஸ்க் கவர் அதிகரிக்கும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின் வாயிலாக பெறப்படும் தொகை அதிகரிக்கும். குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரையில் எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதற்கான பிரீமியத்தை காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் முதலீட்டாளர் செலுத்தலாம். காப்பீட்டுத் தொகை, எளிய ரிவர்ஷனரி போனஸ் மற்றும் இறுதி போனஸ் ஆகியவை பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு இறப்பு பலன்களான ஒன்றாக கிடைக்கும். குறைந்த முதலீட்டில் நிலையான வருமானத்தை பெற எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

- Advertisement -

Comments are closed.