பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள”அண்ணாமலை” என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 17-ந் தேதி காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ந் தேதி காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது.

- Advertisement -

Comments are closed.