சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம்: கூடுதல் பேருந்துகள் இயக்கம்…

சென்னையில் நாளை (15/09/2024) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் நலன் கருதி நாளை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. நாளை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு 10 பேருந்துகள், தி.நகருக்கு 20 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.