திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும்சோழன் எக்ஸ்பிரஸ் இன்று 2 மணி நேரம் தாமதம்…

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று (17-09-2024) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் (எண்:22676) 2 மணி நேரம் தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Comments are closed.