வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது தெற்கு இலங்கை மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, 12 மணி நேரத்தில் பெங்கல் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெங்கல் புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

Comments are closed.