‘கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் கெட்டப் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு .

செப்டம்பர் 5ம் தேதி நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தில் நட்சத்திரப்பட்டாலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு நேரத்திலேயே மறைந்த நடிகர் விஜயகாந்த்தை வைத்து ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு காட்சியில் நடிக்க வைக்க இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.  தற்பொழுது படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் இப்படக்குழு ஹைதரபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது அந்நிகழ்வில் அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு, யுவன், பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திரபிரபலங்கள்  பலரும் கலந்து கொண்டனர்.  விஜயகாந்த் தோற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதில் தந்துள்ளார்.  இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது ஏ.ஐ.தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்த்தை உருவாக்கிய வி.எப்.எக்ஸ் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படவுள்ளவரின் நிறைய தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும். நடிகர் என்.டி.ஆரை திரும்பவும் காட்சிப்படுத்த வேண்டுமென்றால் அவரின் முகத் தோற்றம் தொடர்பான அனைத்து தரவுகளையும் உள்ளீடு செய்த பிறகு எந்த வயதில் வேண்டும் என்றாலும் ஏ.ஐ. உருவாக்கித் தரும்.   ‘ கேப்டன் பிரபாகரன்’ பட விஜயகாந்தின் தரவுகளை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியதாகவும் விஜய்க்கு டி ஏஜிங் செய்யும்போது விஜய்யின் பழைய புகைப்படங்களை டேட்டாவாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.   இளமையாக விஜய்யை காண்பிக்க வேறு ஒரு நடிகரை  நடிக்க வைத்தோம், அப்படிதான் டி.ஏஜிங் விஜய் லுக் வடிவமைத்தோம் என்றார்.   தொழில்நுட்பம் நிறைந்த இந்த உலகத்தில் நாம் இருப்பதால் எல்லாமே சாத்தியம்தான்’ என்று இயக்குநர் வெங்கட் பிரபு இவ்வாறு கூறியுள்ளார்.    ‘கோட்’ திரைப்படத்தில் விஜய் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்திருப்பதாக  கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.

- Advertisement -

Comments are closed.