ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரணம் பெற இன்று முதல் டோக்கன் விநியோகம்..!!

தமிழகத்தில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் ஃபெஞ்சல் புயலினால் மிகுந்த மழை பெய்தது , அதன் தாக்கம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அதிகமாக இருந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் அதி கனமழையாக இருந்தது. இந்நிலையில் பெரும்பாலான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், முதல்வர் மு.க. ஸ்டாலின், மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 2,000 நிவாரணம் வழங்க தீர்மானித்தார். இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகையை வழங்குவதற்கான டோக்கனை ,வீடுகளுக்கு நேரடியாக வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.