அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்..!!

வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி நேற்று (17/10/2024) கரையை கடந்தது. இந்த நிலையில், அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் 22-ம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழ்நாட்டிற்கு பெரிய மழைக்கு வாய்ப்பில்லை எனவும் அவ்வப்போது கனமழை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

Comments are closed.