பழநி கோவில் பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக அதிகரிப்பு!!…

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாமிர்தத்தின் தரத்தை அறிய தேவஸ்தானம் முடிவு செய்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (fssai) அனுமதி பெற்ற தனியார் உணவு பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு பஞ்சாமிர்த மாதிரியை அனுப்பியது. ஆய்வின் மூலம், பழநி கோவிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரமானது என்றும், 50 நாட்கள் வரை கெடாமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தின் காலாவதியை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்து,தற்போது பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி மாற்றி அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது பழநி கோவில் பஞ்சாமிர்தத்துக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Comments are closed.