நாளை 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு…
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(29-11-2024) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. வரும் 30ம் தேதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்.கரையை கடக்கும்போது 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டிச.2ம் தேதி வரை கனமழை நீடிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.