கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை நடவடிக்கை…
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று காலை கிண்டி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தனர். நிலுவைத் தொகை பாக்கி காரணமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் பல கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தவில்லை என புகார் எழுந்ததையடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments are closed.