திருச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி :   பொதுமக்கள் செல்ல ஐந்து நாட்களுக்கு தடை….

மாவட்ட ஆட்சியர் தகவல்....

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் ..எஸ்  வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 01.10.2024ம் தேதி முதல் 05.10.2024 ம்  தேதி வரை ஐந்து நாட்களுக்கு காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் மாலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருக்கிறது. அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Comments are closed.