மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாளய அமாவாசை அக்டோபர் 2-ந் தேதி வருவதை முன்னிட்டு தமிழகத்திலும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் வருகின்ற அக்டோபர் 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் மற்றும் அக்டோபர் 2-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேற்கூறிய இடங்களில் இருந்து www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.