முதலமைச்சர் சென்னையில் 21 மாவட்டங்களில் 400 வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைத்தார்

அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைக்கு புத்துயிர் அளித்தல் திட்டத்தின் கீழ், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 8.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் என மொத்தம் 21 மாவட்டங்களிலுள்ள 195 பள்ளிகளில் ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் 6 மாவட்டங்களில் 35 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 99 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

- Advertisement -

Comments are closed.