தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஓடுதளமாக மாற இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளம்!!

2024 ஜனவரி 2-ம் தேதி, பிரதமர் மோடி ₹1,112 கோடியான திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். இந்த முனையம், 45 லட்சம் பயணிகளை ஆண்டுக்கு கையாளும் திறன் கொண்டது. 24 மணி நேரத்தில் 240 விமானங்களை பராமரிக்க முடியும்.புதிய முனையத்தில் 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்கள் நிறுத்தும் வசதிகள், 10 புறப்பாட்டு கேட்கள், 6 வருகை கேட்கள், 60 செக்-இன் கவுன்டர்கள், 40 இமிகிரேஷன் கவுன்டர்கள் மற்றும் 3 விஐபி லவுஞ்கள் உள்ளன.சிறிய ஓடுபாதை காரணமாக சில பெரிய விமானங்கள் தரையிறக்க முடியவில்லை. இதற்காக, 255 ஏக்கர் நிலத்தில் ஓடுபாதையை 12,500 அடியாக விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டது.

- Advertisement -

Comments are closed.