தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…
தமிழ்நாடு முழுவதும் நாளை (14/09/2024) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் நாளை எழுத உள்ளனா். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்குள் நாளை காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2763 தேர்வு மையங்களும் பள்ளிக்கூடங்கள் ஆகும். இதனால், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Comments are closed.