திருச்சி: வீட்டுத் தோட்டம்; ஒருநாள் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், சிறுகமணியில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. ராஜா பாபு கூறியது: திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு மார்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பயிற்சிக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 590 மட்டும் வசூலிக்கப்படும். மார்ச் 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெறும். இதில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 91717-17832 என்ற கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) முன்பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தை 0431-2962854, 91717-17832, 90805-40412 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
Comments are closed.